விவாகரத்தில் உடன்பாடில்லை... பேச தயார் : ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை | பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு கருத்து: இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு | அக்டோபர் 2ல் வெளியாகிறது 'வேட்டையன்' டிரைலர் | ''என்னை பேயாக பார்க்கணுமா?'': ரசிகரிடம் மறுகேள்வி கேட்ட மாளவிகா மோகனன் | தெலுங்கில் ரீமேக் ஆகும் கருடன்! | பிளாஷ்பேக்: ஆண்டுகள் 60 ஆனாலும் என்றும் 20 ஆக காட்சி தரும் “காதலிக்க நேரமில்லை” படத்தில் இத்தனை சுவாரஸ்யங்களா? | பிளாஷ்பேக்: குங்குமப் பொட்டின் மங்கலத்தை எடுத்துரைத்த இஸ்லாமிய பெண் பாடலாசிரியர் ரோஷனாரா பேகம் | புதிய தோற்றத்திற்கு மாறிய சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக் : சீர்திருத்த திருமணத்தை பேசிய படம் | அவமானங்களை தாங்கித்தான் டைட்டில் வென்றேன்: 'பருத்திவீரன்' சுஜாதா |
மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்', 'மாறன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தங்கலான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் 'எக்ஸ்' தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களை 'ஒரு ஹாரர் படத்தில் பேயாக பார்க்க முடியுமா?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், 'என்னை ஏன் பேயாக பார்க்க விரும்புகிறீர்கள்?' என்றார்.
மற்றொருவர், 'உங்களுக்கு பிடித்த விக்ரம் படம் எது?' என்று கேட்டார், அதற்கு, 'அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், பொன்னியின் செல்வன் 2 படம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்றார். 'அடுத்த தமிழ் படம் எது?' என்று ஒருவர் கேட்டதற்கு, 'சர்தார் 2. இதில் நான் வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்' என்றார். தொடர்ந்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா மோகனனிடம், ஐஸ்வர்யா ராய் பற்றி கேட்டதற்கு, 'நான் அவரது மிகப்பெரிய ரசிகை' என பதிலளித்தார்.